Monday, April 13, 2009

தாத்தா சொன்ன கதை...



நம் கதையில் வரும் நாயகன் அழகன் என்று சொல்ல முடியாவிட்டாலும் புத்திசாலி. அவன் தன் வாழ்க்கை துணைக்காக சரியானதொரு பெண்ணை தேடி கொண்டிருந்தான்.தனக்கு வரப்போகும் மனைவி தன்னை போல் ஒரு அறிவாளியாக இருக்க வேண்டும் என்பது அவனது விருப்பம்.
ஒருநாள் பெண் பார்ப்பதற்க்காக அருகில் இருந்த ஊருக்குச்சென்றான்...

அந்தப்பெண் மிக அழகாக இருந்தாள்...

அவள் கண்கள் மீன்கள்..!!

அவள் கண்ணம் தேன் கிண்ணம்..!!

அவள் இதழ்கள் ஆரஞ்சு சுளைகள்..!!

இருக்கிறதா? இல்லையா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தொட்டால் ஒடிந்து விடும் நிலையில் இருந்தது அவளது இடை...!!


நிற்க..


மொத்தத்தில் அவள் ஒரு பூலோக ரம்பை....!!!


இப்படிப்பட்ட ஒரு பேரழகியை கண்ட யார் தான் சொக்கி போக மாட்டார்கள்,ஆம் நம் கதாநாயகனும் அப்படித்தானே இருக்கிறான்...!!!


ஆனால் அவன் விரும்பியதோ ஒரு புத்திசாலி பெண்ணை,அதனால்

அவள் புத்திசலிதானா என்பதை தெரிந்து கொள்ள அவளிடம் சில கேள்விகள் கேட்க விருப்பப்பட்டான்...


ஆனால் நடந்ததோ வேறு..இவன் கேள்வி கேட்பதற்குள் அவள் தன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்...


(ஒருவேளை அவளும் அவனை போலவே தனக்கு வரப்போகும் கணவன் ஒரு புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று நினைத்து இருக்கலாம்.)


ஆனால் அவன் தான் புத்திசாலி ஆயிற்றே அவனுக்கு தெரியாத பதிலா..!! அதனால் அவனும் அவள் கேள்விகளுக்கு பதில் கூற தயார் ஆனான்..

பாவம் என்ன நடக்கப்போகிறது என்றே தெரியாமல் ..!!!

ஆனால் அவளோ சில புதிர் கேள்விகளை அவன் முன் வைத்தாள், இக்கேள்விகளுக்கு பதில் கூறினால் நம் திருமணம் நடப்பது உறுதி என்றாள்(?).


கேள்விகள் ஒவ்வொன்றையும் கேட்க கேட்க அவனுக்கு தலை மெதுவாக சுற்ற ஆரம்பித்தது...ஒரு கேள்விக்கும் விடை கூறமுடியவில்லை.அதெப்படி விடை கூறாமல் விடுவது அவனோ கதநாயகன் ஆயிற்றே.


அதனால் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டான்..(?)


அவகாசமும் வழங்கப்பட்டது...



கேள்விகளுக்கான பதிலை தேடினான்..விரைவில் அதற்கான பதில்களும் கிடைத்தது.உடனடியாக அவளை நோக்கி ஓடினான்..



நிற்க..



அந்த கேள்விகள் தான் என்ன..??



உலகில் எந்த பசுவிலிருந்தும் கறக்க முடியாத பால் எது?


உலகில் எந்த உழவனாலும் விதைக்க முடியாத நாத்து எது?



உலகில் எந்த ஒரு தறியிலும் நெய்ய முடியாத பட்டு எது?



உலகில் எவராலும் சுவைக்க முடியாத தேன் எது?



உலகில் எவராலும் திரிக்க முடியாத திரி எது?



இவைதான் அந்த கேள்விகள்..



தான் சிரமப்பட்டு அரித்த பதில்களை அவளிடம் கூற மிக ஆர்வமுடன் சென்றான் அவன்..அவளோ வீட்டின் உள்ள இருந்தாள்..இவன் வெளியில் இருந்த படியே பதில்களை கூற ஆரம்பித்தான்..அவளும் பதில்களை கேட்க தயாரானால்..


அவன் பதில் கூறுகிறான்...
பெண்ணே நீ அப்பால் நான் இப்பால் நடுவில் தாழ்பாள்...



நேத்து முந்தா நாத்து..



உன்மேல் ஆசைப்பட்டு வந்தேன்..



எந்திரி பெண்ணே எந்திரி...



இவைதான் அவன் கூறிய பதில்கள்...



அப்புறம் என்ன...கல்யாணந்தான்....


சுபம்...

4 comments:

  1. ஆமா இது யாருடைய தாத்தா சொன்ன கதை..

    ReplyDelete
  2. ஒரு அறிவாளி பேரனுக்கு ஒரு அறிவாளி தாத்தா சொன்னதுங்க...

    ReplyDelete
  3. \\..யார் அந்த பொண்ணு?..\\
    நிச்சயமா ஒரு தமிழ் பொண்ணாத்தான் இருக்கும்..

    ReplyDelete